Saturday 29 October 2011

MY POEMS-3

எண்பதுகளில் எனது கவிதைகள் -3 
  
1 அடுத்த ஊருக்கு வண்டி தள்ளும் 
    கழைக் கூத்தாடிகள் 
     வழித்துணையாய் நிலவு .

2 நட்சத்திர வெளிச்சத்தில் 
   ஓற்றைப்பாதை முடிகிறது 
   மயானப்புகையில் .

3 வெட்டவெளி 
   பால்பொழியும் நிலவு 
   குழந்தையின் பசிக்குரல்.

4 பெரிதாகிக்கொண்டே வருகிறது 
    தென்னங் கிளையில் 
    ஆட்டின் கடிவாய் .

5 பூர்ணிமை நிலவு 
  பனி விழும் இரவு 
   என் கல்லறையில் நீ .

6  மயானக்கூரை 
   காற்றில் தடதடத்தது 
    ஒப்பாரியின் பிரதிகள் .



No comments:

Post a Comment