Saturday 1 October 2011

MYPOEMS-2

எண்பதுகளில் எனது கவிதைகள் -2

1 .நதி நீரின் மீது 
   மெல்ல மிதந்து வருகிறது 
   அக்கரையின் மணியோசை 

2 .வேகமாய் கீழே செல்லும் 
    தூறல் வரிகள் 
    நகரும் குடைகள் 

3 .நான்குவரி மின்கம்பிகள் 
   வரிசையாய் குருவிகள் 
   எங்கே என் வயலின் ?

4 .நகரத்தின் சாலைகளில் 
   வெளிர் மஞ்சள் புகை
   மின்சார அந்தி .

5 .கற்றை இருட்டில் 
   மனசெல்லாம் வெண்மை
    எங்கோ மல்லிகை .

6 .பௌர்ணமி நிலவுக்கு பயந்து 
    அசையும் மரத்தடியில் 
    ஒளியும் நட்சத்திரங்கள் .

7 . பருந்தின் கை நழுவ 
    விழும் கோழிக்குஞ்சு 
     கீழே முள்பத்தை.

   

1 comment:

  1. எண்பதுகளில் எழுதிய ஏழு ஹைக்கூக்களும் அருமை. தொடருங்கள் தோழா.. பாவலர் பொன்.க. புதுகை.

    ReplyDelete