Saturday 29 October 2011

MY POEMS-3

எண்பதுகளில் எனது கவிதைகள் -3 
  
1 அடுத்த ஊருக்கு வண்டி தள்ளும் 
    கழைக் கூத்தாடிகள் 
     வழித்துணையாய் நிலவு .

2 நட்சத்திர வெளிச்சத்தில் 
   ஓற்றைப்பாதை முடிகிறது 
   மயானப்புகையில் .

3 வெட்டவெளி 
   பால்பொழியும் நிலவு 
   குழந்தையின் பசிக்குரல்.

4 பெரிதாகிக்கொண்டே வருகிறது 
    தென்னங் கிளையில் 
    ஆட்டின் கடிவாய் .

5 பூர்ணிமை நிலவு 
  பனி விழும் இரவு 
   என் கல்லறையில் நீ .

6  மயானக்கூரை 
   காற்றில் தடதடத்தது 
    ஒப்பாரியின் பிரதிகள் .



Saturday 1 October 2011

MYPOEMS-2

எண்பதுகளில் எனது கவிதைகள் -2

1 .நதி நீரின் மீது 
   மெல்ல மிதந்து வருகிறது 
   அக்கரையின் மணியோசை 

2 .வேகமாய் கீழே செல்லும் 
    தூறல் வரிகள் 
    நகரும் குடைகள் 

3 .நான்குவரி மின்கம்பிகள் 
   வரிசையாய் குருவிகள் 
   எங்கே என் வயலின் ?

4 .நகரத்தின் சாலைகளில் 
   வெளிர் மஞ்சள் புகை
   மின்சார அந்தி .

5 .கற்றை இருட்டில் 
   மனசெல்லாம் வெண்மை
    எங்கோ மல்லிகை .

6 .பௌர்ணமி நிலவுக்கு பயந்து 
    அசையும் மரத்தடியில் 
    ஒளியும் நட்சத்திரங்கள் .

7 . பருந்தின் கை நழுவ 
    விழும் கோழிக்குஞ்சு 
     கீழே முள்பத்தை.