Tuesday 28 February 2012

பறையின் சித்திரங்கள் -2



(எண்பதுகளில் எனது கவிதைகள் )


1 .வேல் கம்பு அரிவாளோடு 
     வீரமாய்க்  கிடந்தது 
     வேட்டைக்குச் சென்ற பறை .


2 .பறையைத் தட்டும் குழந்தை 
    பாட்டிக்கிழவி சுட்டுத் தரும் 
    பன்றியின் ஈரலுக்காய் .


3 முதல் மனிதர்களின் 
   முதல் கொண்டாட்டம் 
   ஆதிப்பறை .


4 .அரசாணை வரிகள் 
    காற்றில் பிரதிகளாய் 
    பறையின் குரல்கள் .


5 .புளிச்சேப்ப தர்பாரில் 
    தாபத்தில் மிருதங்கம் 
    பரணியின் பறை கேட்டு .



No comments:

Post a Comment